ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்
ஐந்தாவது பாசுரத்தில் – *மாயனை …. போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்ற பதங்களை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
இரண்டாவது பரிபாடலில்
மா அயோயே! மா அயோயே! மறுபிறப்பருக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருபின் மயோயே! எப்படி காட்டப்பட்டுள்ளன என்பதை,
புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் விளக்கங்களை கொண்டு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி.
அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-20 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-05 | தனுர் ௴ |



