ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்
ஆறாவது பாசுரத்தில் – *புள்ளரையன்… வெள்ளத்தரவில் துயில் கொண்ட வித்து என்ற பதங்களை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும், பரிபாடலிகளில்
**செவ்வாய் உவணத்துயர்கொடி
**சேவலூர்தி
**ஆயிரம் விரித்த அனங்குடை அருந்தலை தீ-உமிழ் திறனொடு முடிமிசை அணைர
இவைகள் எப்படி காட்டப்பட்டுள்ளன என்பதை, – புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் விளக்கங்களை கொண்டு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-21 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-06 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 06௳ |🙏



