Thanks to Sri Vijayaraghavan Krishnan
பங்குனி உத்சவம் நான்காம் திருநாள் – கருட வாகன புறப்பாடு .. இந்த உத்சவம் திருச்சி குணசீலம் சாலையில் – நொச்சியம் தாண்டி இரட்டை மண்டபம் என்கிற இடத்தில் நடைபெற்றது ..
அந்த கிராமமே ஸ்ரீரங்கபுரம் என்கிற பெயரில் – இருக்கும் – இதை சென்ற நூற்றாண்டில் திவான் பகதூர் ரெட்டிராவ் என்கிற மாதவர் – கட்டளை ஏற்ப்படுத்தி செய்து வந்தார் — அந்த மண்டபம் 1990 களில் லாரி இடித்து சேதமான பின் தறப்போது பெருமாள் அங்கு செல்வதில்லை .. அதை அந்த குடும்பத்தார்கள் கும்பகோணத்தில் இருந்து வந்து ரெங்கவிலாஸ் மண்டபத்தில் மரியாதை வாங்கி கொள்கிறார்கள் ..
இந்த கடைசி படத்தில் பெருமாள் திருவந்திகாப்பு மண்டபத்தின் மேல் கூரையில் 1660 ஆண்டு சொக்கநாத நாயக்கர் காலத்து ஓவியங்களில் பெருமாளின் பல வித வாகனங்கள் படம் உள்ளது இன்றைய கருட வாகன படம்
விஜயராகவன் கிருஷ்ணன்




















