ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – *ஓது வேதத் துளங்கு
என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே மாதவன் கிடாம்பி – கூரம் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்
**முதல் ஆறு பாசுரத்தின் சாரார்த்தம்
**எழை ஏதலன் முதல் ஆறு பாசுரத்துடன் முடியாமல் தொடர்வது எதனால்?
**ஒருவன்.. அத்விதீயன். ஸ்வாமி நம்பிள்ளை
**ப்ரயோஜனாந்திரபரரான சாந்தீபனியை கோதில் வாய்மையினான் என்று ஆழ்வார் கருதுவது ஏன்?
**வைதிகனை வேதவாய்மொழி அந்தணன் என்பான் ஏன்?
**ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளிய பின்பும், தனக்கும் தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ரஹஸ்யார்த்தம் உபதேசித்தது போல் பாரிப்பது ஏன்?
ஒன்னலர் தங்களை வெல்லும் மாடமாளிகைசூழ் திருமங்கை மன்னை நெடுமாலை இந்தமிழால் நினைந்ததில் நனைவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-12 |
27 November, 2021

அடியேன் ஸ்வாமி! பெ தி 5-8,பதிகத்தின் 7,8,மற்றும் 9ஆம் பாசுரார்த்தங்களை அற்புதமாக தெரிவித்து, மேலும் திருவேங்கடமுடையான், தொண்டைமான் சக்ரவர்த்திக்கு அருளிய திருவஷ்டாக்ஷர மந்திரத்தின் அர்த்தங்கள், குரும்பறுத்த நம்பி வைபவம், ஆழ்வார் இப்பதிகத்தின் மூலமாக பிரார்த்தித்த விஷயங்கள் என்று அருமையாக சாதித்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின் அடியேன்!🙏🙏