ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் – ஸ்வாமி தேஸிகன் திருநட்சத்திர வைபவத் தொடரில்-
உண்ணும் சோறு
என்னும் தலைப்பில்
ஸ்ரீ கரியமாணிக்கம் பரகாலன் பாலாஜி ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**ஆஹார ஸுத்தி மன ஸுத்தி
**ரஜஸ் தமோ குணம் விளைவிக்கும் உணவுகள்
**விடத்தக்க ஆஹாரங்கள் *எம்பெருமானுக்கு அமுது செய்விக்காதது
*எச்சில் சோறு,
**கூடாததை கலந்த சோறு
**பழையது, அழுகியது கெட்டது
**சமைத்தது என்று சொல்வது ஏன்?
‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்று ஸ்வாமி தேசிகநனுடைய ஆஹார நியமம் கொண்டு அமுது செய்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-16
02-October, 2021

அடியேன், ஆஹார நியம வைராக்யத்தை ஸ்வாமி தேசிகரும் ஆழ்வாரும் கண்ணணுமே அருளணும்
ஸ்வாமி தேசிகர் திருவடிகளே ஶரணம்
அடியேன் ஸ்வாமி! ஆஹார நியமம், பல அறிந்திராத விவிஷயங்கள், உண்ணும் சோறு பருகும் நீர் திண்ணும் வெற்றிலை எல்லாம் கண்ணன், என்று வாழும் பாக்கியத்தை ஸ்வாமி நம்மாழ்வாரும், ஸ்வாமி வேதாந்தாச்சாரியரும் அருளவேண்டும்! அற்புதமான விளக்கங்கள் சாதித்துள்ளீர்கள்! நமஸ்காரம் 👏👏