ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஜ்யோதிஷ்குடி –
ஆராய்ச்சி உரை – வழங்குபவர் –
கலையிலங்கு மொழியாளர் முனைவர் ஸ்ரீ உ வே மதுரை அரங்கராஜன் ஸ்வாமி
இதில்,
**ஜ்யோதிஷ்குடி அடையாளம் கண்டது எப்படி?
**உறுதுணையாக இருந்தவர்கள் யார்?
**கொடிக்குளம்தான் ஜ்யோதிஷ்கொடி
**பவித்திரமான குளம் – குளத்தின் மஹிமை
**பெரியோர்களின் சான்றுகள்
**கட்டெறும்புகள் , தேனீக்கள்
ஸ்ரீ உ வே மதுரை அரங்கராஜன் ஸ்வாமி, பரமகாருணிகரான பிள்ளை லோகாசார்யர் திருவரசை அடையாளம் கண்ட பிரகாராங்களை, நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
ப்ரமேயத்தை காத்தளித்த ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் ப்ரபாவத்தில் கொடிக்குளத்தில் நீராட வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்குநின்பாதமேசரண்குழுமத்தினர்’
ப்லவ – ஆனி 01 |
Dated 15 June 2021






அடியேன் ஸ்வாமி! ஸ்வாமி பிள்ளை லோகாச்சாரியர், ஜ்யோதிஷ்குடி வைபவங்களையும், தம்முடைய அனுபவங்களையும், தெரிவிக்கும் பொழுது, உடன் சென்ற அனுபவத்தை தந்தது, மனம் கனக்க, கண்ணீருடன், சேவித்துக் கொண்டோம், ஒரு முறையேனும், அங்கு சென்று, சேவிக்கும் பாக்கியத்தை ஸ்வாமி அருளவேண்டும், அடியேன் 🙏🙏🙏🙏
பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி – திருவோணம்)
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே!
ஐப்பசியில் திருவோணத்து அவதரித்தான் வாழியே!
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே!
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே!
நித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே!
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே!
உத்தமமாம் முடும்பை நகர் உதித்த வள்ளல் வாழியே!
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே!.
ஒவ்வொரு திருவோணத்திற்கும் அடியோங்கள் அங்கு சென்று சேவாகாலத்தில் கலந்துகொள்கிறோம்..
திரு.அரங்கநாதன் ஸ்வாமியின் திருவடிகளில் அடியேன் தண்டன் சமர்ப்பிக்கின்றேன்
அடியேன்
காக்கூர் கண்ணன் ராமாநுஜதாசன்
நாராயணபுரம், மதுரை
Parama bhagyam Swamy,parama bhagyam, Devarir thiruvadigalukku adiyenudaya anantha Kodi namaskarangal