திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை “கற்றுக்கறவை” பதினொன்றாவது பாசுரத்தில் இருந்து, கீழ்க்கண்ட பதங்களை நமக்கு விளக்குகிறார் – – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
இதில்,
1. கறவைகள் பருவம் – முக்தர் படி
2. பசு மேய்த்து உகக்கும், கன்று மேய்த்து இனிதுகக்கும் – ஸம்ப்ரதாயார்த்தம்
3. பலகறந்து – ஈச்வரனைப்போல
4. செற்றார் – சாதுசனத்தை நலியும் தீயபுந்திக்கஞ்சன்
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.