ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர், சோபக்ருத் ௵, புரட்டாசி ௴ உபன்யாசங்களாக, வேதாந்தாசார்யர் திருநக்ஷத்திர வைபவத்தைக் காரணமாகக் கொண்டு, த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி மூலம் எம்பெருமானின் குணானுபவங்கள், உபன்யாசங்களாக மஹநீயர்கள் மூலம்‘ அளிக்கவிருக்கிறோம்.
அதற்கான முன்னுரை – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.
அடியார்கள் கேட்டு, இன்புற்று, தங்கள் மேலான கருத்துக்களையும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறோம்.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, புரட்டாசி ௴,
நாள்: 04௳
[2023-09-21]

அருமை அருமை,
முன்னுரை வழங்கிய ஶ்ரீ பத்மநாபன் ஸ்வாமிக்கு அடியேனின் நமஸ்காரம்.
வரப்போகும் நாட்களில், எம்பெருமானின் குணானுவங்கள் குறித்துப் பல்வேறு மஹநீயர்கள் உரை நிகழ்த்தும் நிகழ்வால் அகமகிழ்கிறேன்.
திருவாய்மொழியின் சிறப்பு::
அந்தாதி வகையில் அமைந்த விருத்தங்கள், கலித்துறை, கலிவிருத்தம், கலிப்பா, வஞ்சித்துறை, கலிநிலைத்துறை, ஆசிரியத்துறை போன்ற பல்வேறு மரபுப் பாக்களை வடிவமைத்தார் நம்மாழ்வார்
எம்பெருமானின் குணானுபவங்களைப் போற்றுகின்ற பாடல்களை அர்த்தம் தெரிந்து அநுசந்திக்க பகவானின் அநுக்கிரகம் வேண்டும்.
நம்மாழ்வார் பாடல்களைப் புகழும் விதமாக…..
“குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும்
சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”
என்று வள்ளுவன் மொழிந்ததாகக் கூற்றுண்டு.
இதேபோல, கம்பனும் ‘சடகோபர் அந்தாதி” படைத்து திருவாய்மொழியின் சிறப்பை நமக்குணர்த்தினார்.
அந்தம் இலாமறை ஆயிரத்து
ஆழ்ந்த அரும்பொருளை
செந்தமி ழாகத் திருத்தில
னேல்நிலைத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும்என்
னாம்தமி ழார்கவியின்
பந்தம் விழாஒழு குங்குரு
கூர்வந்த பண்ணவனே
குருகைப் பிரான் திருவாய்மொழியை அருளா விட்டால், நாம் செய்கின்ற வேள்விகள், விழாக்கள் அனைத்த்தும் வீணாகி யல்லவா போயிருக்கும் என்கிறார் கம்பர். வாசிக்க வாசிக்க இன்பந்தருக் கவிதையினைத் தந்த குருவாகிய குருகூர்ப்பிரானை பண்ணவன் என்கிறார் கம்பர்.
உபதேச ரத்தின மாலையில்..
நம்மாழ்வார் நம்பிள்ளை நஞ்சீயர்
என்பரவ ரவர்தம் ஏற்றத்தால்
என சடகோபர் புகழை எடுத்துரைக்கிறது.
திருவாய்மொழியில் ஒவ்வொரு பாசுரத்தின் இலக்கியச் சுவை, விருத்த நயம், சமயக் கோட்பாட்டின் கருத்துக்கள் போன்றவை திருவாய்மொழியின் புகழுக்குக் காரணியாய் விளங்குகின்றன.
இப்படி திருவாய்மொழியின் சிறப்பைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.
அடியேன்
பெருவை கி.பார்த்தசாரதி
நங்கநல்லூர்