ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:
வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
திருவிருத்தத்தில் அரிய சொற் பிரயோகங்கள்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே T C A வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**ஒரே பாசுரத்தில் பல அரிய பதங்கள்
**பாங்கி பழிக்கிரங்குவதா! தாய்ப்பாசுரமா!
**வேழங்களின் அறைகூவல் போல்
**முன் நின்றாய், தன் குடிக்கு தக்கவோ?
**என்ன விதமான பழிகள்?
**சாரிகைத் திரிந்தான்
**சாரிகை.. எம்பெருமானுக்கா? புள்ளுக்கா?
** த்வராயை நம:
**சின்மொழி
**உள்ளுறைப் பொருள்
உயர்ந்த அர்த்தங்களை, சில வார்த்தைகளிலேயே அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத்௵ – வைகாசி௴-29 |
12-06-2022

அரிய சொற் பிரயோகங்களை அனுபவிப்பது, உயர்ந்த விசேஷம் ஸ்வாமி! பாக்கியம் அடியேன்!
Srimathe Ramanujaya namaha
அடியேன் ஸ்வாமி. மிகவும் நேர்த்தியாக திருவிருத்தத்தின் அரிய சொற் பிரயோகங்களை விளக்கியிருக்கிறீர்கள்.
சாரிகைப் புள்ளர் என்ற வார்த்தையில் வரும் சாரிகை என்ற வார்த்தை சுற்றி வரும் அல்லது நகர்ந்து செல்லும் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று தேவரீர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இங்கு கர்நாடகாவில் transport corporation என்பதை சாரிகே சம்ஸ்தே என்கிறார்கள். இந்த அழகான தமிழ் சொல்லை இங்கே பயன்படுத்துகிறார்கள் என்பது வியப்பானது தானே?
அடியேன் ரஞ்ஜனி ராமானுஜ தாசி