Thanks to Sri Raghavan Nemili
ஸ்ரீ.ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ.நம்பெருமாளுக்கு ஜ்யேஷ்டாபிஷேகம்.
காவிரியின் அம்மா மண்டபம் பகுதியிலிருந்து ஜ்யேஷ்டாபிஷேகத்திற்காக திருக்குடங்களில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு யானையின் மீதும் மற்றும் பலர் தாங்களாகவே தீர்த்தத்தை திருக்கைகளில் ஏந்திக் கொண்டு ஸ்ரீ.நம்பெருமாளின் ஸன்னதிக்கு எழுந்தருளுகின்றனர்.
ஜ்யேஷ்டாபிஷேகம் ஏகாந்தமாய் நடை பெற இருப்பதால் பத்தர்கள் அனைவரும் யானை மூலம் திருக்குடத்தில் தீர்த்தம் கொண்டு வருவதை ஸேவிப்பதே பெரிய பாக்கியமாகக் கொண்டு பெரும் திரளாக வீதிகளில் இருந்து ஸேவித்துக் கொண்டிருந்தனர்.
அடியோங்களுக்கும் முதல் முறையாக இன்று ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்று உலகம் முழுவதும் உள்ள பத்தர்கள் அனைவரும் ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்க உடனே பதிவிடுகின்றேன்.
மேலும் எடுத்த பல படங்களை அடுத்தது பதிவிடுகின்றேன்.

